Monday, September 17, 2012

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள்


நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்! நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான், நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம். மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi) காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி) மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. [ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY)உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால்,இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே,முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம். இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி,உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு,பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர். ‘நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ (குர்ஆன் 68:04) ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்) முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா) நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. (டாக்டர் ஜான்சன்) இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (குர்ஆன் 33:21) முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (குர்ஆன் 48:01) துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். (எஸ். எச். லீடர்) இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்) முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (குர்ஆன் 48:29) நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை.கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99) நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்) ‘இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம்’. (குர்ஆன் 35:08) செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி) முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52) அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54) திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன் - இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. - ஜி.ஜி. கெல்லட் - சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர் - அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. - கிப்பன் - எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். - கவியரசி சரோஜினி நாயுடு -

Sunday, September 16, 2012

தினமணி - ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!


தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்கிறோம். ஆனால், தமிழ் எப்போது ஒரு மொழியாக உருவாகியிருக்கும் என்பதற்கு போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வக்குடிகளின் மொழிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதற்கு விடை காண இயலும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் 200 மொழிகளுக்கு மேல் பேசி வந்திருக்கின்றனர். இவற்றுள் தற்போது இருபதிற்கும் குறைவான வட்டார மொழிகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிற்குத் தனி வரிவடிவம் கிடையாது. ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000. இவர்களில் 30,000 பேர் மட்டுமே தங்கள் தாய்மொழியை ஓரளவு பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150. இம்மொழிகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வெவ்வேறு 15 குடும்பங்களின் வழித் தோன்றல்கள் இம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு மொழியையும் 5000 பேருக்கு மேல் பயன்படுத்துவோர் இல்லை. பத்து மொழிகளைப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 1,000. "ஆராண்டா" என்னும் மொழியை ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்னும் மத்திய ஆஸ்திரேலியப் பகுதியில் இருக்கும் நகரைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முக்கியமான மொழி "பிதாஞ்ச ஜாத்தா" இன்னொரு மொழி "வால் ம ஜாரி". முன்பு ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நியூகினி, இந்தோனேசியா ஆகியவற்றின் நிலப்பகுதி இந்தியாவோடு நெருங்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர். இடையிடையே நீர்ப்பகுதிகள் இருந்தாலும் அவற்றின் தூரம் குறுகிய அளவிலேயே இருந்தது என்று நிலநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர்கள் மீனவர்களாகவும் கடற்கரைப் பகுதிகளில் உணவைத் தேடிச் சென்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மிக விரைவாகச் சென்றிருக்க முடியாது என்கிறார் மரபணு விஞ்ஞானி ஸ்பன்சர் வெல்ஸ். கிரஹம் வால்ஷ் என்பவர் வட ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி என்னும் இடத்தில், பாறையில் தீட்டப்பட்ட பழைய சித்திரம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் அதில் 29 பேர் படகு ஒன்றில் இருப்பதாக வரையப்பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ்:- தென் இந்தியாவில் வசிக்கும் பிறமலைக் கள்ளர் என்னும் பூர்வக்குடிகளின் இரத்தத்தில் உள்ள மரபணுவும், ஆஸ்திரேலியக் குடிகளின் மரபணுவும் (M130) ஒன்றுபோல் இருக்கின்றன என்று கூறினார். ஸ்பென்சர் கூற்றுப்படி ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென் இந்தியா வழியாக ஒரு பகுதி மக்கள் தென் கிழக்கு ஆசியா, நியூகினி ஆகியவற்றின் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்தனர் என்று தெரிகிறது. கடைசி உறைபனி (Last Ice Age) காலத்தில் இந்தக் குடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடல் நீர்மட்டம் உயர்ந்தபோது இந்தியத் துணைக்கண்டம் தென் கிழக்காசியாவில் இருந்து துண்டித்துப் போகும் நிலை ஏற்பட்டது. குமரிக் கண்டம்: தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும், அது கடலில் மூழ்கிப்போனது என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''. என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். "பஃறுளியாறு" - கங்கை போன்று பெரிய ஆறு என்றும், குமரி மலை இமயமலைக்கடுத்த பெரு மலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், பாண்டிய நாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கிய பின் தமிழகத்தில் பெரிய ஆறாக இருந்தது குமரியாறே. "தெனா அதுருகெழு குமரி'' (புறம் - 67) கடைச்சங்க காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியும் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே''. என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்தில் சிறந்த, சோழ நாடு, புனல் நாடு எனப்பட்டது. (பழந்தமிழராட்சி ஞா.தேவநேயப் பாவாணர்). தமிழ் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது குமரிக் கண்டம் நீரில் மூழ்கிப் போவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் இக்கண்டம் வழியாகச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஸ்பென்சர் வெல்ஸின் மரபணு ஆய்வு மெய்ப்பிக்கிறது. பேசியது என்ன மொழி? தமிழகம் வழியாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் சென்றனர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் என்ன மாதிரியான மொழி பேசியிருக்கக் கூடும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. தமிழகம் மூலமாகச் சென்றதால் அவர்கள் பேசும் மொழிகளில் ஏதேனும் தமிழ்ச் சார்ந்த சொற்கள் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறியது. அண்மையில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளைப் பற்றிய சிறிய ஆய்வினை மேற்கொண்டேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கில் இருக்கும் அவர்களின் மொழிகளில் சில சொற்கள், இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிச் சொற்களாகவே இருக்கின்றன. * முட்டி - muti : கை, கால் முட்டிகளை முட்டி என்றே ஆஸ்திரேலியப் பூர்வக் குடிகள் கூறுகின்றனர். * பிறை - pira : இளம் திங்களைப் பிறை என்கிறோம். அவர்கள் சந்திரனை இப்படிக் கூறுகின்றனர். * வல்லூறு - waluwuru: கழுகுக்கு வல்லூறு என்றும் பெயர் உண்டு. ஒருவகைக் கழுகை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். * காகம் - kaanka: காகத்தை "கான்கா" என்கின்றனர். * புற்று - putu: புற்று என்பதை நாம் புத்து என்று பேச்சு தமிழில் வழங்குகின்றோம். அவர்களும் (எறும்பு) புற்றை = புத்து என்றே கூறுகின்றனர். * கிளி - killy : கிளியை அவர்கள் "கீளீ" என்கின்றனர். * குட்டன் - kuta: தமிழில் குட்டம் என்றால் மகள். அவர்கள் அண்ணனை குட்டா என்றழைக்கின்றனர். * வால் - walu, waly: வால்,வாலிது ஆகிய சொற்களுக்குத் தமிழில் வெண்மை, தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு. கடவுளை "வாலறிவன்" (வால் அறிவன்) என்கிறார் வள்ளுவர். வாலறிவன் என்றால் "தூய அறிவுடையவன்" என்று பொருள். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் வெள்ளை நிறத்தை wala, waly என்றழைக்கின்றனர். அவர்கள் வெள்ளைக்காரரை walypara என்றும் வெள்ளைக்காரியை walypala என்றும் அழைக்கின்றனர். * இலகரி - Ilakari: நீண்ட அகன்ற பொந்திரைக்குத் தமிழில் இலகரி என்று பெயர். அவர்கள் நீண்ட வான்வெளியை இவ்வாறு அழைக்கின்றனர். * மங்குல் - munga: பகல் பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டு வந்து, இறுதியில் இருட்டாகிறது. இத்தகைய இருட்டுதான் இரவு. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இரவுப் பொழுதை இவ்வாறு கூறுகின்றனர். "மங்குல்" என்னும் சொல்லுக்குத் தமிழில் இருள் என்னும் பொருள் உண்டு. இன்னும் சில சொற்கள் சிதைந்த நிலையில் வழங்கிவருகின்றன. எ.கா:- இல்லம் - yiwalu; பறத்தல் - parkani மேற்குறிப்பிடும் சொற்கள் pitgantjatjara என்னும் வட்டார மொழியில் காணப்படுகின்றன. இந்த மொழி வட ஆஸ்திரேலியாவிலும் தென் ஆஸ்திரேலியாவிலும் பேசப்படுகிறது. 50,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இன்னும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இவர்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியைத் தங்களோடு கொண்டு சென்றுள்ளனர். பயன்படுத்தியவை தனித்தமிழ்ச் சொற்கள். வடமொழிக் கலப்பு இல்லாதவை. இறுதியாக:- ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் பேசும் மொழியில் பயன்பாடு காணும் தமிழ்ச் சொற்கள் மூலம், தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழி என்பது உறுதியாகத் தெரிகிறது. க.கந்தசாமி "மலேசிய அறிமுக மலர்" மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம். நன்றி:- தினமணி

நாடுகளும் அதன் தலைநகரங்களும்


நாடுகளும் அதன் தலைநகரங்களும் 1.அங்கோலா — லுவாண்டா. (Luvanda) 2.அசர்பைஜான் — பாகூ. 3.அமெரிக்கா — வாஷிங்டன் டி.சி 4.பியூர்டோரிகோ — சான்ஜிவான் 5.குவாம் — அகானா 6.வடக்கு மரியானாத் தீவுகள் — சாய்பான். 7.சமோவா — பாகோ 8.வெர்ஜின் தீவுகள் — சார்லோட்டா 9.அயர்லாந்து — டப்ளின். (Dublin) 10.அர்மீனியா — ஏரவன். (Yereven) 11.அர்ஜென்டீனா — போனஸ் அயர்ஸ். (Buenos aires) 12.அல்பேனியா — டிரானா. (Tirana) 13.அல்ஜீரியா — அல்ஜீயர்ஸ். (Algiers) 14.அன்டோரா — அண்டோரா லா வெல்லா. (Andorra La velle) 15.ஆப்கானிஸ்தான் — காபூல். (Kabul) 16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா — செயின்ட் ஜோன்ஸ். (saint Johns) 17.ஆஸ்திரியா — வியன்னா. (Vienne) 18.ஆஸ்திரேலியா — கான்பெர்ரா. (Canberra) 19.இத்தாலி — ரோம். (Rome) 20.இந்தியா — புதுடில்லி. (New Delhi) 21.இந்தோனேசியா — ஜகார்த்தா. (Jakartha) 22.இராக் — பக்தாத். (Baghdad) 23இரான் — டெஹ்ரான். (Teheran) 24.இலங்கை — கொழும்பு. (Colombo) 25.தமிழீழம் — திருகோணமலை. (Tringo) 26.இஸ்ரேல் — ஜெருசலேம். (Jerusalem) 27.ஈக்வாடார் — க்யுடோ. (Quito) 28.ஈக்வடோரியல் கினியா — மலபோ. (Malabo) 29.உக்ரைன் — கீவ். (Kive) 30.உகண்டா — கம்பாலா. (Kampala) 31.உருகுவே — மோண்டேவிடியோ. (Montevodeo) 32.உஸ்பெகிஸ்தான் — தாஷ்கண்ட். (Tashkent) 33.எகிப்து — கெய்ரோ. (Cairo) 34.எத்தியோப்பியா — அடிஸ் அபாபா. (Addis Ababa) 35.எரித்ரியா — அஸ்மாரா. (Asmara) 36.எல்சால்வடார் — சன்சால்வடார். (San Salvador) 37.எஸ்தோனியா — டால்லின். (Tallin) 38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் — அபுதாபி. (Abudhabi) 39.ஐவரி கோஸ்ட் — யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro) 40.ஐஸ்லாந்து — ரெய்க்ஜாவிக். (Reykjqvik) 41.ஓமன் — மஸ்கற். (muscut) 42.கத்தார் — தோஹா. (Doha) 43.கம்போடியா — போனெம்பென்க். (Phnom Penh) 44.கயானா — ஜார்ஜ் ரவுன். (geroge Town) 45.கனடா — ஒட்டாவா. (Ottawa) 46.கஸகஸ்தான் — அல்மாதி. (Almathy) 47.காங்கோ — பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville) 48.காங்கோ (முன்னாள் ஜயர்) — கின்ஷாஸா. (Kinshasa) 49.காபோன் — லிப்ரவில்லே. (Libreville) 50.காமரூன் –யாவூண்டே. (Yaounde) 51.கமரோஸ் — மொரோனி. (Moroni) 52.காம்பியா — பன்ஜீல் . (Banjul) 53.கானா — அக்ரா. (Accra) 54.கியூபா — ஹவானா. (Havana) 55.கிர்கிஸ்தான் — பிஸ்ஹேக். (Biskek) 56.கிரிபாடி — தராவா. (Tarawa) 57.கிரீஸ் — ஏதென்ஸ். (Athens) 58.கிரெனடா — செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges) 59.கினியா — கோனக்ரி. (Conakry) 60.கினியா_பிஸ்ஸெல் — பிஸ்ஸெல். (Bissau) 61.குரோசியா — சியாக்ரெப். (Zagreb) 62.குவைத் — குவைத். (Kuwait) 63.கென்யா — நைரோபி. (Nairobi) 64.கேப்வெர்ட் — பிரய்யா. (Praia) 65.வடகொரியா — பியோங்யாங். (Pyongyang) 66.தென்கொரியா — சியோல். (Seoul) 67.கொலம்பியா — பொகோடா. ( Bogota) 68.கோஸ்டாரிகா — சான் ஜோஸ். (San Jose) 69.கெளதமாலா — கெளதமாலா நகர். (Gautemala City) 70.மேற்கு சமோவா — அபியா. (Apia) 71.சஹ்ராவி அரபுக் குடியரசு — எல் _ அலயுன். (El_ Alayun) 72.சாத்ட் — இன்ட்ஜாமெனா. (N`Djamena) 73.சாம்பியா — லுசாகா.( lusaka) 74.சாலமன் தீவுகள் — ஹோனியரா. (Honiara) 75.சாடோம் மற்றும் பிரின்சிப் — சாடோம். (Sao Tome) 76.சன்மரினோ — சன்மரினோ. (San Marino) 77.சிங்கப்பூர் — சிங்கப்பூர். (Singapore) 78.ஜிம்பாவ்வே — ஹராரே. (Harera) 79.சிரியா — டமாஸ்கல். (Damascus) 80.சியர்ரா லியோன் — ப்ரீரவுன். (Free Town). 81.சிலி — சாண்டியாகோ. (Santiago) 82.சீனா — பெய்ஜிங். (Beijing) 83.சுவாசிலாந்து — பாபேன். (Mbabne) 84.சுவிட்சர்லாந்து — பெர்ன். (bern) 85.சுவீடன் — ஸ்டாக்ஹோம். (Stockhalm) 86.சுரினாம் — பரமரிபோ. (Paramaribo) 87.சூடான் — கார்டூம். (Khartoum) 88.செக் குடியரசு — பராகுவே. (Prague) 89.செனகல் — .தாகர். (dakar) 90.செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre) 91. செயின்ட் லூசியா — காஸ்ட்ரீஸ். (Castries) 92.செயின்ட்வின்சென்ட் — கிங்ஸ்டவுன். (Kings Town) 93.சேஷெல்ஸ் — விக்டோரியா. (Victoriya) 94.சைப்ரஸ் — நிகோசியா. (Nicosia) 95.சோமாலியா — மொகடிஷூ. (Mogadishu) 96.செளதி அரேபியா — ரியாத். (Riyadh) 97.டிரினிடாப் மற்றும் டொபாகோ — போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain) 98.டென்மார்க் — கோபன்ஹேகன். (Copenhagen) 99.டொமினிகன் குடியரசு — சான்டோ டொமின்கோ. (Santo Domingo) 100.டொமினிகா — ரோஸியு. (Roseu) 101.டோகோ — லோம் (Lome) 102.டோங்கா — நுகு அலோஃபா (Nuku Alofa) 103.தாய்லாந்து — பாங்காக் (Bangkok) 104.தான்சானியா — டூடுமா (Dodoma) 105.தஜிகிஸ்தான் — துஷான்பே (Dushanbe) 106.துர்க்மேனிஸ்தான் — அஷ்காபாத் (Ashkhabad) 107.துருக்கி — அங்காரா (Ankara) 108.துனிசியா — துனிஸ் (Tunis) 109.துவலு — புனாஃபுதி (Funa Futi) 110.தாய்வான் — தைபே (Taipei) 111.தென் ஆப்பிரிக்கா — கேப்ரவுன் (cape Town) 112.நமீபியா — வின்ட்ஹோக் (Windhoke) 113.நோர்வே — ஒஸ்லோ (Oslo) 114.நிகரகுவா — மனாகுவா (managua) 115.நியூசிலாந்து — வெல்லிங்டன் (Wellington) 116.நெதர்லாந்து — ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) 117.நேபாளம் — காட்மாண்டு (Kathmandu) 118.நைஜர் — நியாமி (Niyamey) 119.நைஜீரியா — அபுஜா (Abuja) 120.நெளரு — யாரென் (Yaren) 121.பங்களாதேஷ் — டாக்கா (Dhaka) 123.பராகுவே — அகன்சியான் (Aguncian) 124.பல்கேரியா — சோஃபியா (Sofia) 125.பலாவ் — கோரோர் (koror) 126.பனாமா — பனாமா நகர் (Panama City) 127.பஹ்ரைன் — மனாமா (Manama) 128.பஹாமாஸ் — நஸ்ஸாவ் (Nassau) 129.பாகிஸ்தான் — இஸ்லாமாபாத் (Islamabad) 130.பாப்புவா நியூகினியா — போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby) 131.பார்படோஸ் — பிரிட்ஜ் ரவுன் (Bridge Town) 132.பாலஸ்தீனம் — காஸா (Gaza) 133.ஃபிரான்ஸ் — பாரிஸ் (Paris) 134.பிரிட்டன் — லண்டன் (London) 135.வடக்கு அயர்லாந்து — பெல்ஃபாஸ்ட் (Belfast) 136.ஸ்காட்லாந்து — எடின்பர்க் (Edinburg) 137.ஐஸ் ஆஃப் மேன் — டக்ளஸ் 138.அங்குய்லா — திவாலி 139.பெர்முடா — ஹாமில்டன் 140.மான்ட்செரட் — பிளைமவுத் 141.பிரேசில் — பிரேசிலியா (Brasillia) 142.ஃபிலிப்பைன்ஸ் — மணிலா (manila) 143.ஃபின்லாந்து — ஹெல்சிங்கி (helsinki) 144.ஃபிஜி — சுவா (Suwa) 145.புருண்டி — புஜீம்பரா (Bujumbura) 146.புருனை — பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan) 147.பிர்கினாஃபாஸோ –அவ்கதெளகெள (Ouagadougou) 148.பூட்டான் — திம்பு (Thimpu) 149.பெரு — லிமா (Lima) 150.பெல்ஜியம் — பிரல்ஸல்ஸ் (Brussels] 151.பெலராஸ் — மின்ஸ்க் (Minsk) 152.பெலிஸ் — பெல்மோபான் (Belmopan) 153.பெனின் — போர்டோ (Porto _ Nova) 154.பொலிவியா — லாபாஸ் (Lapaz) 155.போட்ஸ்வானா — காபோரோன் (Gaborne) 156.போர்த்துக்கல் — லிஸ்பன் (Lisbon) 157.போலந்து — வார்ஸா (Warsaw) 158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா — சரோஜிவோ (Sarajevo) 159.மங்கோலியா — உலன்பதார் (Ulan Bator) 160.மடகாஸ்கர் — அன்டானானாரிவோ (Antananarivo) 161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு — பான்குய் (Bangui) 161.மலாவி — லிலாங்வே (Lilongwe) 162.மலேசியா — கோலாலம்பூர் (Kula Lumpore) 163.மார்ஷல் தீவுகள் — மஜீரோ (Majuro) 164.மாரிடானியா — நவாக்சோட் (Nouak Chott) 165.மால்டா — வலேட்டா (Valetta) 166.மால்டோவா — சிசிநவ் (Chisinau) 167.மாலத்தீவுகள் — மஜீரோ (male) 167.மாலி — பமாகோ (Bamako) 168.மாசிடோனியா — ஸ்கோப்ஜே (Skopeje) 169.மியான்மர் — யங்கோன் (Yangon) 170.மெக்சிகோ — மெக்சிகோ நகர் (Mecixo City) 171.மைக்ரோனேஷியா — பாலிகிர் (Palikir) 172.மொரிசியஸ் — போர்ட் லூயிஸ் (Port Louis) 173.மொனாக்கோ — மொனாக்கோ (Monaco) 174.மொசாம்பிக் — மொபுடோ (Maputo) 175.யூகோஸ்லாவியா — பெல்கிரேட் (Belgrade) 176.யேமன் — சனா (Sana) 177.ருமேனியா — புகாரெஸ்ட் (Bucharest) 178.ருவாண்டா — கிகாலி (Kigali) 179.ரஷ்யா — மொஸ்கோ (Moscow) 180.லக்ஸம்பார்க் — லக்ஸம்பார்க் (Luxenberg) 181.லாட்வியா — ரிகா (Riga) 182.லாவோஸ் — வியாணன்டைன் (Vientiane) 183.லிச்டென்ஸ்டெயின் — வடூஸ் (Vaduz) 184.லிதுவேனியா — வில்னியஸ் (Vilnius) 185.லிபியா — திரிபோலி (Tripoli) 186.லெசோதா — மஸெரு (Maseru) 187.லெபனான் — பெய்ரூட் (Beirut) 188.லைபீரியா — மன்ரோவியா (Monorovia) 189.வனுவது — விலா (Vila) 190.வத்திக்கன் — வத்திக்கன் நகர் (Vatican City) 191.வியட்னாம் — ஹனோய் (Hanoi) 192.வெனிசுலா — கராகஸ் (Caracas) 193.ஜப்பான் — டோக்கியோ (Tokyo) 194.ஜமைக்கா — கிங்ஸ்டன் (Kington) 195.ஜார்ஜியா — திபிலிசி (Tbillisi) 196.ஜிபூடி — ஜிபூடி (Djibouti) 197.ஜெர்மனி — பேர்ளின் (Berlin) 198.ஜோர்டான் — அம்மான் (Amman) 199.ஸ்பெயின் — மாட்ரிட் (Madrid) 200.ஸ்லோவாகியா — பிராட்டிஸ்லாவா (Bratislava) 201.ஸ்லோவேனியா — ஜூபில்ஜானா (Ljubljana) 202.ஹங்கேரி — புட்டாபெஸ்ட் (BudaBest) 203.ஹாங்காங் — விக்ரோரியா (Voctoriya) 204.ஹோண்டுராஸ் — டெகுசிகல்பா (Tegueigalpa) 205.ஹைதி — போர்ட் _ அவு _ பிரின்ஸ் (Port _ Au _ Prince)

சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?


பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா? குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.'' சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்.. ""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா. இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this) பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர். ""கோழிதான் காரணமா டாக்டர்?'' ""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர். தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது. ""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது. பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள். இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா? பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார். ""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார். கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது... ""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர். அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது. வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர். தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது. நன்றி -மணிகண்டன், பகத்சிங் Alternate Solution is Eat "நாட்டுக்கோழி "Country Cock & Hen"

தினமணி - அயல்மாநிலத் தமிழர்களும், தாய்மொழிக் கல்வியும்


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும். ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன. பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. முனைவர் திருமலை துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம் நன்றி:- தினமணி

Wednesday, September 12, 2012

லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் !


லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் ! http://rssairam.blogspot.com/2012/09/blog-post_6.html மக்கள் நினைத்தால் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இய்க்க மாத இதழ், ஆசிரியர் இல். சு. ஜெகநாதன் 9444939698 இவர்களை அணுகி உறுப்பினராகலாம். கூட்டங்கள் அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். 500 டூபாய் செலுத்தி அடையாள அட்டை வாங்கிக் வைத்துக் கொண்டால் லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்கும். மேலும் ஒரு இணைய தளத்தில் லஞ்சம் கொடுத்த விபரத்தை முகவரியுடனோ, முகவரி இல்லாமலோ பதிவு செய்யலாம். அந்த இணையதளம் வடநாட்டில்தான் இயக்கப்படுகின்றது என்று கருதுகின்றேன்.எனது வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன் தேடினேன், உடனே கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இத்துடன் இணைய முகவரி இணைக்கப்பட்டு விடும்.. தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். துணிச்சலுக்கும், நேர்மைக்கும் ஆயிரம் வணக்கங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் ? அதையும் சொல்ல்லித் தாருங்கள் .நன்றி. LKM பப்ளிகேஷன்ஸ் கார்த்திகேயன் 33/4 ( 15/4 )இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17, 24361141, 24340599 வழங்கியுள்ள பதிப்புரை :- ஆர்.நடராஜன் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் அறிமுகமாகியுள்ள, அவர்களுடன் பழகியுள்ள, எழுத்தாளர்; பத்திரிகையாளர். இரு குடியரசுத் தலைவர்கள் இவரது நூல்களைப் பாரட்டியுள்ளார்கள். குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது இவர் எழுதியிருந்த ஒரு நூலுக்கு அணிந்துரை தந்துவிட்டு, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். விலகியவுடன் இவரது இன்னொரு நூலையும் வெளியிட்டார். ஒரு பிரதமர் லண்டனில் இவரது நூலை வெளியிட்டார். இன்னொரு பிரதமர் இவருடன் மதிய விருந்தில் தேர்தல் போக்குகள் பற்றி விவாதிதார். பிரதமராக இருந்தபோது தன்னைப்ப் பற்றி இவர் எழுதிய நையாண்டிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பை, ஒரு முன்னாள் பிரதமர், இவரிடமிருந்தே கேட்டு வாங்கிப் படித்தி ரசித்தார். இவரை விருந்துக்கு அழைத்தார். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ,இப்போதைய மத்திய அமைச்சருமான ஒருவர், இவரது இன்னொரு நூலை வெளியிட்டார். ஒரு முன்னாள் அமைச்சர் தன் டாக்டர் பட்ட ஆய்வேடு வெளியாக, இவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஒரு தேசியத் தலைவர் சென்னையில் இவருடன் தனியாக அரசியல் பற்றி விவாதிக்க அரைமணிநேரம் ஒதுக்கினார். நான்கு தமிழக முதல்வர்கள், மூன்று கவர்னர்களுடன் இவர் பழகியிருக்கின்றார். சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இவரது கதைகளையும், கட்டுரைகளையும் பாராட்டியிருக்கிறார்கள். இவரோ, நட்பு, பழக்கம், தாட்சண்யம் பாராமல் மனதுக்குப் பட்டதை அப்பட்டமாக எழுதுகின்றார். இவரது விழிப்புணர்வு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமைப் படுகின்றது. எழுத்தாளர் ஆர். நடராஜனின் முன்னுரையிலிருந்து :- நாட்டின் பலமும் பலவீனமும் மக்களே. நம் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்காகவே அரசியல்வாதிகளின் ச்யநலப் போக்குகளை படம் பிடித்துக் காட்டி வருகின்றேன். மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டே மக்களைச் சுரண்டும் அரசியல்வாதிகளைப் புரிந்துகொள்ளாதது நம் பலவீனமே. எழுதுவதற்குள்ள துணிவு இப்போது பதிப்பிபதற்கும் வேண்டும். லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பை, வெளியிட்டுள்ல நண்பர் சென்னை எல்.கே.எம். பதிப்பக உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு என் நன்றி. வாசகர்களின் கருத்தை வரவேற்கிறேன், என்கிறார், எழுத்தாளர், ஆர். நடராஜன். அவரது, மின்னஞ்சல் முகவரி :- hindunatarajan@hotmail.com லஞ்சம் வாங்காதீர்கள் ! கொடுங்கள்! லோக் சத்தா என்ற மராத்தியப் பத்திரிகை லஞ்சம் கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொண்டது. நாற்பது கடிதங்கள் வ்ந்தன. பத்திரிகையாளர் பிரபாகர் குல்கர்னி தொகுத்த கடிதங்களின் சாரம்சம் இவைதான்:- மின்வாரியம், மாநகராட்சி, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்துத்றை அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்ரும் லிஃப்ட் சான்றிதழ்கள், மரணச் சான்றிதழ் அலுவலகங்கள், ”லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது. நாங்கள் ல்ஞ்சம் கொடுத்திருக்கின்றோம்.” என்றே கூறியிருந்தனர். மும்பை லிஃப்ட் தயாரிக்கும் ரமேஷ் போஸ்லே சான்றிதழ் பெற லிஃப்ட் ரூ.3000 முதல் ரூ.10000 வரை லஞ்சம் தர வேண்டியிருந்ததாம்.லிஃப்ட் நிறுவனங்கள் லைசென்சுக்கு ரூ.50000 முதல் ஒரு லட்சம் தருவதால், அந்த அலுவலகத்தின் எட்டு இன்ச்ப்ர்க்டர்கள் மாதம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள். இஞ்ஜினியர்களும் ஆர்கிடெக்ட்களும் சம்பாதிப்பதவிட அதிகமான தொகையை மும்பை முனிசிபல் கார்ப்பொரேஷனைச் சேர்ந்தவர்கள் கட்டட ஒப்பந்தக் கோப்புகளில் பெற்ரு விடுகிறார்கள் என்கிறார் பெயர் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பாத ஒரு ஆர்கிடெட் ஒருவர். .தாதர்ரில் உள்ல ஒரு மருத்துவ மனையின் டைரக்டர் ராஜ்ஸ்ரீ கேல்கர், வெளிநாட்டில் வசித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தவர். தாநாட்டில், தனக்கும் மகனுக்கும் பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ரத்திற்கு விண்ணப்பித்தபோது, ஒவ்வொரு பாஸ் போர்ட்டிற்கும் ரூ.300/- லஞ்சம் தர வேண்டியிருந்ததாம். புரோக்கட்கள் புழங்குமிடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். சுரேந்திரநாத் மற்ரும் உமேஷ் கடம் ஆகியோருக்கு லஞ்சம் கொடுர்ஹ்ர்ஹ பின்னர்தான் லசென்ஸ் கிடைத்ததாம். சந்தீப் தாமோதர் எல்ர்க்ட்ரிக் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.சம்பந்தப்பட்ட அலுவலரை டீ சாப்பிட அழைத்தார். 500ரூ.லஞ்சம் கொடுக்கவும் தயாராய் இருந்தார். அவர் ஏதேதோ சொல்லி 7000/- ரூ. கறந்து விட்டார். இதனால் அவர் வெறும் எலெக்ட்ரீஷியனாக இருந்தால் போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டார். மரணச் சான்றிதழ் பெற்ரிட மாநகராட்சியில் 500/- ரூ.லஞ்சம் கொடுத்த அவலத்தை அருண், ராஜாராம் ஜோஷி ஆகிய வாசகர்கள் கூறினர். சொத்துச் சான்றிதழ் பெற வருவாய்த்துறை அலுவலகத்திற்கும், பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்திற்கும் லஞ்சம் கொடுத்தகதை இரு வாசகர்களுடையதாக இருந்தது. பத்திரிகைகள் லஞ்சப்புகார்களைக் கேட்க ஆரம்பித்தால், இது புதிய லோக்பால் சட்டம் என்று சொல்லி, லஞ்சம் கொடுத்தவர்களையே அரசு ஜெயிலில் தள்லிவிடும் அபாயமும் உண்டு. ஒரு சமயம் குல்சாரிலால் நந்தா , லஞ்சமில்லாத நிர்வாகத்திற்காக “சதார்த்த சமிதி” என்ற அமைப்பைத் துவக்கினார். உறுப்பினராகத் தகுதி, 1) லஞ்சம் பெறக் கூடாது 2) லஞ்சம் தரக் கூடாது என இரண்டுதான். தன் நண்பர் ஸ்ரீபிரகாசாவை ( காங்கிரச் காலத்தில் தமிழ் நாட்டில் கவர்னராக இருந்தவர் ) அந்த சமிதியில் உறுப்பினராகுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஸ்ரீவத்சா, ” லஞ்சம் வாங்கக் கூடாது; என்ற நிபந்தனை சரி. லஞ்சம் கொடுக்காதே, என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாது. எனக்கும் காரியம் ஆக வேண்டாமா ?” என்று பதிலளித்தார். ஆன்னானப்பட்ட கவர்னருக்கே இந்தக் கதி என்றால், அப்புறம் மக்கள் எந்த மாத்திரம்? லஞ்சம் போன்ற சமதர்ம, சமத்துவவாதி வேறு யாரும் இல்லை. கடவுள் வேறுபாடு பார்ப்பதில்லை. சமூக நீதியுடன் இயங்குவது லஞ்சம் மட்டுமே. லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி வேறு வார்த்தையை அகராதியில் பதிய வேண்டியதுதான். இந்த நூலில் 54 தலைப்புக்களில் கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் முத்துக்கள். அவசியம் வாங்கி வீட்டு நூலகத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம். எழுத்தாளர் மின்னஞ்சல் முகவரி மேலே உள்ளது. நூலை விமர்சனம் செய்வோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அதுதான் படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் பரிசு. கிடைக்குமிடமும் மேலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பதிப்புரை ஒன்றே போதும், இந்தநூலினை வாங்கிடத் தூண்டும். லஞ்சம் கொடுப்போமா? த்விர்ப்போமா ? தீர்மானிக்க வேண்டியது நாம்தான் ! இன்னும் சில பொன்மொழிக் குறிப்புகள்:- 1. ஒருவரிடம் பதவி இருக்கிறது; மற்றவரிடம் அதிகாரம் இருக்கிறது. 2.பிரதமர் பதவியே அதிகாரத்தில் கூனிக் குறுகிப் போய்விட்டதே ! 3.பத்திரிகை உலகம் ஏன் சோனியா பற்றி “சதிகார மெள்னம்”காக்கிறது? 4. சட்டம் தன் வேலையைச் செய்கிறது. பணமும் தன் வேலையைச் செய்கிறது. 5.அரசியல் சுழற்சியில் தரகர்கள் இல்லாமல் பணப்புழக்கம் இல்லை. . 6. கூட்டணிதர்மம் அரசியல் சாசனத்தைவிட சிரேஷ்டமானது. 7.இந்திய ஜனநாயகம் இப்பொழுது ஆம்புலன்சில் ஏறியிருக்கிறது. இத்தலைப்புக்களுரியவை கட்டுரைகளைக்கிடையேதான் வரும் VVI POINTS தேடிப்படிப்பதும் ஒரு சுகமல்லவா?

Thursday, November 24, 2011

இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ

இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ عن سهل بن سعد رضي الله عنه : قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ، دلّني على عمل إذا عملته أحبني الله وأحبّني الناس فقال ازهد فى الدنيا يحبك الله ازهد فيما فى ايد الناس يحبك الناس ஸஹல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு மனிதர் நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இறைவனின் பிரியத்திற்கும், மக்களின் பிரியத்திற்கும் என்னை ஆளாக்குமே அப்படிப்பட்ட ஒரு செயலை எனக்கு சொல்லுங்கள் யா ரஸுலுல்லாஹ் என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள் உலகபற்றற்று வாழுங்கள் அல்லாஹ் உங்களை பிரியப்படுவான், மக்கள் கைகளில் உள்ளதை பற்றற்று இருங்கள் மக்கள் உங்களைப்பிரியப்படுவார்கள் என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லாஹு அலைஹி வஸ்லலம் அவர்கள் கூறினார்கள் இயற்கையாகவே மனிதன் சமூகத்தோடு கலந்து வாழுகிற அமைப்பிலே படைக்கப்பட்டிருக்கிறான், அவன் சமூகத்தில் மதிப்பிற்குரியவனகவும் குடும்பத்தில் பிரியத்திற்குரியவனாகவும் வாழ ஆசைபடுகிறான், இப்படி வாழும்பொழுது இறைவனின் பொருதத்தை பெற்றவனாகவும், அவனது பிரியத்திற்குரியவனாக வாழ ஆசைபடுகின்றான், அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி அமைக்கவேண்டும் என்று சஹாபாக்கள் தீட்சண்னியமாக கேட்டுவைத்தார்கள் வாழ்வியல் கலையை வகுத்துத்தர வந்த வல்லவன் தூதர் இதற்கு அழகாக விடைபகர்ந்தார்கள் எவ்வளவு அழகான இன்னும் ஆழமான பதில் என்று பாருங்கள். இறைவனுக்கு பிரியமாவதற்கு உலகப்பற்ற தன்மை வேண்டும். ஜுஹுத் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. இமாம்கள் ஜுஹுத் என்ற அரபி வார்த்தைக்கு விளக்கம் தரும்போது உலகப்பேராசை கொள்ளாது இருப்பது, இன்னும் எது இவ்வுலகில் கிடைக்கவில்லை அதைப்பற்றி கவலை அற்று இருப்பது இன்னும் ஒரு இமாம் இப்படி கூறிப்பிடுகிறார்கள் " எதனால் மறுமையில் எவ்வித பிரயோஜனமும் இருக்காதோ அதைவிட்டு தவிர்ந்து இருப்பது இதில் மறுமையில் இடையூறு தரக்கூடியதும் அடங்கும் மறுமையில் பிரயோஜமும் அதுவும் அடங்கும். இதற்கு ஒரு அழகிய முன்னுதாரணம் ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கைதான் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு , அப்துற்றஹ்மான் இப்னு அவ்ப் மற்றும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய ஸஹாபாக்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள் .ஆனால் அந்த செல்வத்தின் ஆட்சி அவர்களின் இதயத்தில் இருக்கவில்லை.எத்துணை கோடிகள் வந்தாலும் எத்தணை கோடிகளை இழந்தாலும் அவர்களின் இதயத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. ஆகையால் தான் ஸித்திக்குல் அக்பர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் எந்த பொருளும் இல்லாமல் அனைத்தையும் இறைவழியில் செலவு செய்ய முடிந்தது சுலைமான் அலைஹிஸ்ஸலாம், தாவூத் அலைஹிஸ்ஸலாம் மிகப்பெரும் அரசர்களாக இருந்தார்கள் ஆனால் அவர்கள் மிகப்பெரும் ஜாஹித்களாக (உலக்ப்பற்றறவர்களாக இருந்தார்கள் ) இதை நபியின் இன்னொரு ஹதீஸ் இப்படி விளக்குகிறது உலக பற்றற்தன்மை என்பது நாம் எண்ணுவது அல்லது பார்ப்பது போன்று ஹலாலான பொருட்களை ஹரமாக்குவதிலோ அல்லது பொருட்களை தேடாமல் இருப்பதிலோ அல்ல மாறாக உன் கையில் இருக்கும் பொருள் மீது நீ வைக்கும் நம்பிக்கையை விட இறைவனிடத்தில் இருப்பதிலே அதிக நம்பிக்கை வைப்பது எத்துணை அழகாக நபி பெருமானார் வர்ணித்துள்ளார்கள் மில்லினியம் ஆண்டில் இறைவனுக்கும் பிரியமானவர்களாக இன்னும் மக்களுக்கும் பிரியமானவர்களாக வாழுதல் சாத்தியமில்லை என்று பேசித்திரிபவர்களுக்கு நபி அவர்களின் இந்த வார்த்தை எத்தணை பொருத்தமானது சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் வழியில் நடக்கிற நஸிபையும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதிலிருந்து விலகி இருக்கிற நிலையை வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக ஆமீன்
என் கண்ணாடி எங்கே عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم ان احدكم مرآة اخيه ان رآى به اذى فليمط عنه உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும். நேற்றைய தொடர் சரி நேற்று நிறுத்திய இடத்திலே துவங்கலாம், இது ஒரு அழகான செய்தியாக இருக்கிறதே இதை எப்படி ஆரம்பிப்பது என்று தானே சந்தேகம், வருங்கள்அதையும் பார்போம். அன்பர்களே அதற்கு அருமையான வழியை மிர்காத் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, அடுத்தவர்களை திருத்த புறப்படும் முன் நாம் பாடம் பயிலவேண்டிய இடம் நாம் தான். 1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவருக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும். ஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்துகாக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும். அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். இன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும். ஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான். அவர் சொன்னார் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா? அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா? அப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா? அப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும். உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும். அடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும். ஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது. அடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை, அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும். 2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது. சில பேர் " யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்". தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம். 3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில், ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர். இதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே, ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள். நீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள். இதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.

Wednesday, November 23, 2011

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !



கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்





கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்




ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

நன்றி .குமுதம் சினேகிதி

நற்செயல் எது

நற்செயல் எது

عن عبد الله بن مسعود رضي الله عنه سالت النبى صلى الله عليه و سلم اي الاعمال افضل قال الصلوة لوقتها قالت ثم اي قال بر الوالدين ثم اي قال الجهاد فى سبيل الله


இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் நான் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்களிடம் கேட்டேன்.
செயல்களின் சிறந்தது எது
உரித்த நேரத்தில் தொழுவது என்று விடையளித்தார்கள்
பின்பு எது என்று வினவினேன்
பெற்றோருக்கு பணிவிடை செய்வதாகும் என்று கூறினார்கள்
பின்பு எது என்று வின்வினேன்
அறப்போர் புரிவதாகும் என்று கூறினார்கள்

பல நேரங்களில் நபி பெருமான் அவர்கள் இது போன்ற பல கேள்விகளை ஸஹாபக்கள் கேட்டு அதன் மூலம் மற்ற மக்களுக்கும் பிரயோஜம் ஏற்படுத்தினார்கள். முதலாவது செய்தி தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழுவதாகும், அடுத்து பெற்றோரிடம் நல்ல முறையில் அவர்களின் மனம் கோணாமல் நடப்பதாகும்.அடுத்து இறைபாதையில் அறப்போர் புரிவதாகும்.

Friday, September 23, 2011

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!
************************************************************
இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ்
இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!

அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய
அறிவே இவர்களின் ஆயுதமாம்!
பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்
பாருலகே இவர்கள் சீர்வரிசை! (இவர்தாம்...)1.

ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)
அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்!
சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்
செயலுக்கு ஞானமே மூலதனம்! (இவர்தாம்...)2.

பொறுமை இவர்களின் போர்வையாம்-பெரும்
போராட் டம்தான் பிறவிக்குணம்!
உறுதி இவர்களின் நல்லுடைமை -என்றும்
உண்மையே இவர்களின் வழிகாட்டி! (இவர்தாம்...)3

ஏழ்மை இவர்களின் தனிப்பெருமை-வியக்கும்
எளிமை இவர்களின் வாழ்வருமை!
தாழ்மை இவர்களின் செல்வகுணம்-இதனைத்
தாரணி புகழ்ந்திடும் தினம்தினம்! (இவர்தாம்...)4

பணிசெய் தல்இவர் களின்நிறைவு-ஒளிரும்
பகுத்தறி(வு) இவர்களின் பக்தியின்வேர்!
அணியாய் அமைந்தநன் நம்பிக்கை-அது
அன்றோ இவர்களின் வல்லமை! (இவர்தாம்...)5

தியானம் இவர்களின் உயிர்த்தோழன் -உள்ள
திருப்தி இவர்களின் வெற்றிப்பொருள்!
தியாகம் இவர்களுக் குரியகலை -இவர்கள்
தியாகத்திற் கீடு இணையில்லை! (இவர்தாம்...)6

சொல்லும் செயலும் ஒன்றாக - நாம்
சொர்க்கத்து வாழ்வினைப் பெற்றிடவே
அல்லும் பகலும் உழைத்தவர்கள் -அந்த
அல்லாஹ் வேதத்தை உரைத்தவர்கள்! (இவர்தாம்...)7

இறைசொல் ஏற்றம் பெற்றிடவே- எங்கும்
இஸ்லாம் பூரணம் உற்றிடவே
நிறைமொழி கூறிய நீதரிவர்-மக்கள்
நேர்நிறை ஒன்றெனும் போதரிவர்! (இவர்தாம்...)8

அகிலங் களுக்கோர் அருட்கொடை-யாக
அமைந்தார் நடையே நன்னடை!
முகம்மது நபியினும் மேலவர்-என
மொழிந்திட எங்கே யாருளர்? (இவர்தாம்...)9

பற்றுகொள் வார்கள் எவரிடமும் -மீளப்
பரிந்துரைப் பார்கள் இறையிடமும்!
ஒற்றுமை இவர்கள் உவந்தநிலை-இரண்டு
உலகிலும் இவர்களுக் குயர்ந்தநிலை!! (இவர்தாம்...)10.

----ஏம்பல் தஜம்முல் முகம்மது

Tuesday, December 7, 2010

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!
ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய அறையினை விட்டு வெளியே வந்து அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம சொல்லுங்கள் அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாது கர்னல் நேராக இருப்பது போன்று சப்தம் போடுகிறார் என்று சொன்னாராம். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவர்க்கு தொல்லை பேசியாக இருந்ததாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலை பேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்து விட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளை சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டது தான் இன்றைய சமுதாயத்திற்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.
செல்போன் வந்தபிறகு வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலமை வந்துவிட்டது. சாதாரண கூலி முதல் கோமான் வரை சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாசிய பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கிய செயல்பாடுகளை தெரியாதவர்கள் இல்லை யென்றே சொல்லலாம். இருந்தாலும் சில முக்கிய செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1) அட்ரஸ் கையெடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ப்ரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலக தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எழிதாக கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ்

மேற்கூறிய உபயோகங்கள் சிலவகை தான். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதினை மாற்றி உலகம் கைக்குள் அடங்கிருக்கிறது என்று சொல்லுமளவிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டு பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கபட்டது. அப்போது அந்த தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்து விட்டனர். அந்த சம்பவத்தினை அந்த தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்கு தகவல் அனுப்பினார். அதனை வைத்துதான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்த சம்பவம் நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது. ஆனால் தொலை தொடர்பில் ஏற்பட்ட சேட்லைட் வளர்ச்சி அபாரமானது என்பதினை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று சிலி நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டு சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதினை ஒரு துளைபோட்டு அதில் ஒரு செல்போன் செலுத்தி தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ப்ரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்தது அனைவரும் பார்த்திருப்பார்கள்.

2) அதே போன்று விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து வாயு மண்டலத்தினை தொடும் வரை தரைக்கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்தது அனைவரும பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு தான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள்.

ஆகவே தொலை தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதினை எல்லோரும் அறிவர்.
இந்திய நாடு பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து வளரும் நாடு என்ற நிலையிலிருந்து அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல வளர்ந்த நாடாக திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ் சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடனும் பச்சை மிளகாய், வெங்காயத்தினை கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய் இன்று வயிறார சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். கரடுகளிலும், முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம் இன்று விதவிதமாக செருப்புகள்,ஸ_க்கள் அனுந்து அரசே இலவசமாக சைக்கிளில் பள்ளிக்கு சென்று இலவசமாக பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளர பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காக கம்ப்யூட்டர், செல்போன,; மோட்டார் சைக்கிள்,ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தன் செல்ல சிறு பிள்ளைகளுக்கும் செல்போன் விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே இன்டர்நெட் வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவு தான் வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது. எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக் என்ற வலை தளங்களுக்கு தங்கு தடையின்றி சென்று பல்வேறு பால் வித்தியாமில்லாத புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படி செய்து இள மனதினை கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூட கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும், அரசும் தரமான பள்ளி, கல்லூரி படிப்பினை மாணவர்களுக்கு கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்களில் சிலர் படுகுழி என்று தெரிந்தும் அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம். பல்வேறு செய்திகள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லாம் என நினைக்கின்றேன். கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகள் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக அறிந்து அவர்களை சென்று பார்க்கும் போது அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாத குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினை பாழடித்து, பாலுட்டி தாளாட்டிய பெற்றோரை மறந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் எந்தளவிற்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதினைப் பாருங்களேன்.

2) தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியினை ஒரு தலை பட்சமாக காதலித்தாராம். அவருக்கு அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்த பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லா செயலினை ஊர் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம.;. அந்த பள்ளி மாணவியினையும,; அந்த ஊர் பெரியவரையும் பலி வாங்க அந்த இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி அதில் டெட்டனேட்டர்களைப் பொறுத்தி மாணவி மற்றும் ஊர் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும,; அந்த ஊர் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது அவைகள் வெடித்து அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக சமீபத்திய பத்திரிக்கை செய்தியாகும்.

இளசுகளை கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது. டி.வி. அடுத்தது சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்டில் ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுரை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப்பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமா பாட்டுக்களை கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது. என்றால் யாரும் மறுக்க முடியாது. அதுவும் வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயண கலவை ஏற்பட்டு கிளர்ச்சியினைத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதுவே அவர்கள் பெற்றோர்களே இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர். கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்கு கள்ளிச் செடி’ என்று தெரிவதில்லை என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே தங்கள் கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக செல்போனும், இன்டர்நெட்டும் இருக்கிறது.

ஆனால் அவைகளின் வாசனை இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்று சில உதாரணங்களை கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியினைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தினைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வி பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவினை வைத்து புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்நத கார் டிரைவர் மகள் பாத்திமா பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லை.
3) கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர்கடையினைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என் இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா மலைக்க வைக்குமளவிற்கு சாதனை படைத்து எட்டு புதிய கண்டுபிடிப்பிற்கு மூலகர்த்தாவாகி ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார.; அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்கள் திருமணமாகாத சிறுவர், சிறுமிகளின் மனதினைக் கொடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லாங் என்ற கிராமத்தில் ஊர் பஞ்சாயத்துக் கூடி திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்திருக்கிறது என்றால் பாருங்களேன் எந்தளவிற்கு அந்த கிராமத்தில் செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்திருக்குமென்று.

செல்போன், இன்டர்நெட் துஷ் பிரயோகங்களை தடுக்க சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவுதாக இருந்தால் அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு சேவை வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர், மாணவர்களுக்கு போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து பெற்றோர் அதனை கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த அண்ணா யுனிவர்சிட்டி துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து அவருடைய உத்திரவினை பின் பற்றி பல கல்லூரிகள் தடையும் விதித்தன. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகள் செல்போன் பேச்சுக்களை கண்காணிப்பதினை முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக பிள்ளைகளை படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராது. எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதினை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளை பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதினை படித்த பெற்றோர் கம்ப்யூட்டரினை டவுண்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்கு தெரியாமல் வரும் மெயில்களை பிள்ளைகள் நீக்கினால் அப்படி நீக்கப்பட்ட பகுதி டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கி தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களை படிப்பதிற்காக விடுதியில் விடும்போது அவர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்கள் இருக்கும் விடுதிகளுக்கு சென்று அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக்கூடாது. அதுவும் பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக்கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி அவர்கள் உயிருக்கும், கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேனிக்ரையினைச்சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி அதுவே எமனாக முடிந்து அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும, அவளுடைய அழகான ஆண் ஒன்று பெண்னொன்று குழநதைகளைக் கடத்தி வாடிப்பட்டி அருகே கொலையும் செய்து விட்ட நவம்பர் மாதச் செய்தி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து பின் திருமணம் நடக்க சில நாட்கள் இருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ அல்லது இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய் நிர்வானமான படத்தினை நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை தானே என்று அனுப்பிய போட்டோ பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து விட்டபோது அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணை கேவலமாக பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றும் போது சேர்ந்து நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது.

பெண்களுக்கு எதிரான சதி என்ற உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுவினைக் கொல்லுதல், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன்கொடுமை போன்றவைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்ற வைகளால் சீரழிவதினை பெற்றோரும், உற்றாரும், உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: முஹர்ரம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
முஹர்ரம்

http://mudukulathur.com/?p=3509

அபூதாலிப் கணவாய்:
நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும் முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய குடும்பத்தினராகிய ஹாஷிம் கிளையார், முத்தலிப் கிளையாருடனும் யாரும் கொடுக்கல், வாங்கல், திருமண உறவு போன்ற எந்த செயலிலும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவிப்பு செய்து, அதை தீர்மானமாக எழுதி கஃபத்துல்லாஹ்விலும் தொங்க விட்டார்கள்.
இதனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவை விட்டு ஒதுங்கி அவர்களுக்கு சொந்தமான ஒரு மலைப் பள்ளத்தாக்கிற்கு சென்று தங்கினார்கள். இந்த இடத்திற்கு ”ஷுஃ’ப அபூதாலிப்” அபூதாலிப் கணவாய் என்று பெயர். இங்கு மூன்று ஆண்டுகள் உணவின்றி, உதவியின்றி பெரும் கஷ்டத்தோடு வாழ்ந்தார்கள். பின்னர் இந்த தீர்மானம் கிழித்தெறியப்பட்டு மக்கா நகருக்குள் வந்தார்கள். அக்கணவாயில் தங்கியிருந்த போதுதான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பிறந்தார்கள். இந்நிகழ்வு நபித்துவத்தின் 7 ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
முஹர்ரம் 10-ஆம் நாள் “ஆஷுரா” தினம்:
ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்குமாறும், அன்று தம் குடும்பத்தார்களுக்கு தாராளமாக செலவு செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு வைத்திருந்தார்கள். இதன் சிறப்பு என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இன்று நல்ல நாள்; பனூ இஸ்ராயீல்களை அவர்களின் விரோதிகளிடமிருந்து அல்லாஹ் ஈடேற்றமடையச் செய்த நாள்; எனவே, மூஸா(அலை) அவர்கள் இன்று நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறி, அந்த நாளில் தாங்களும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். (புகாரி,முஸ்லிம்)
கைபர் யுத்தம்:
கைபர் யுத்தம் ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மக்கத்து காஃபிர்களுடன் செய்த ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் சில நாட்களில் கைபருக்கு புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த போது அல்லாஹுத்தஆலா “ஃபதஹ்” அத்தியாயத்தை அருளினான். அதில், நபியவர்களுக்கு கைபரின் வெற்றியையும், அங்கு கிடைக்கும் கனீமத்தை(வெற்றிப் பொருட்களை)யும் வாக்களித்திருந்தான். இதைப் பற்றி திருக்குர்ஆனில்…….
“யுத்தத்தில் (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப்பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான்; நீங்கள் அதை கைப்பற்றுவீர்கள்.” (48;20)
அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம்:
நபி(ஸல்) அவர்கள், ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் கைபர் யுத்தத்திற்கு புறப்படும்முன், பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் எழுதினார்கள். அவ்வகையில், ஹபஷா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ரோம் நாட்டு மன்னர் கைஸர், பாரசீக நாட்டு மன்னர் கிஸ்ரா, சிரியா நாட்டு மன்னர் ஹாரிஸ் இப்னு அபூஷமிர் அல்கஸ்ஸானி, எகிப்து நாட்டு மன்னர் முகவ்கிஸ், யமாமா நாட்டு மன்னர் ஹவ்தா இப்னு அலி அல்ஹனஃபி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்:
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப்பின் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இஸ்லாமிய வருடம் கணக்கிடப்படவில்லை. ஹிஜ்ரத் நிகழ்ந்து 16-ஆண்டுகளுக்குப்பின் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் தான் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் மற்ற சஹாபாக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றத்திற்கு பின், இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முக்கியக்காரணமாக இருந்த “ஹிஜ்ரத்”தை மையமக வைத்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிட முடிவு செய்தார்கள்.
மேலும் திருக்குர்ஆனில் அத்தியாயம் 9; 108-வது வசனத்தில் “ஆரம்பநாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில் தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது”. என்று கூறப்பட்டுள்ளதில் “ஆரம்ப நாள்” என்ற வார்த்தை ஹிஜ்ரத்தை குறிப்பதால், இந்த வசனமும் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஆண்டைத் துவக்கக் காரணமாக இருந்தது.
தங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1432 – வது இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆண்டு முழுவதும் அனைத்து நற்பாக்கியங்களையும் நன்மைகளையும் நம் அனைவருக்கும் நல்கிட துஆச் செய்கின்றேன்.
மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்.

Sunday, November 14, 2010

பசுமை என்னும் தாய்மை

பசுமை என்னும் தாய்மை

பாட்டினால் விளக்குவேன் “பசுமை”ப் புரட்சி
கேட்டிடு தோழா! கேடுகள் வாரா
காட்டினை அழித்து கட்டிடம் கட்டினால்
வீட்டினுள் காற்று வீசிடுமா என்ன?!

”ஏசி”க் காற்று எல்லார்க்கும் கிட்டிடுமா?
யோசித்துப் பார்த்து உன்னறிவில் பட்டிடுமா?
“ஓசான்” படலமும் ஓட்டை ஆனதால்
சுவாசிக்கக் காற்று சும்மா கிட்டிடுமா?

தென்றல் உன்னைத் தீண்டிட வேண்டும்;
மன்றலில் மலர்கள் மணத்திட வேண்டும்;
குன்றாது மழையும் கொட்டிட வேண்டும்;
நன்றாய் மரங்களை நட்டிட வேண்டும்

வீட்டில் தோட்டம்; வீதியில் மரங்கள்;
நாட்டில் “பசுமை”; நம்வாழ்வும் செழுமை!!!
உயிர்போல் மதித்து; உரமிட்டு வளர்த்து;
பயிர்களைப் போற்று; “பசுமை”க் காத்திடு

தாய்போல் உன்னைத் தாங்கிடும் மண்ணின்
சேய்போன்ற மரங்களை சேதாரம் செய்தால்
நோய்தீர்க்கும் மூலிகை நொடியில் கிட்டுமா?
ஓய்வின்றி மரங்களை ஒடித்துப் போடாதே

பிறப்பின் துவக்கம் படுத்திட்ட மரக்கட்டை
இறப்பில் உனக்கு இடும்பெயர் “கட்டை”
இடுகாடு சுடுகாடு இரண்டிலும் மரக்கட்டை
கொடும்வெயில் சொல்லும் குளிர்நிழல் மரத்தினையே..!!!!!


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

எனது வலைப்பூ முகவரி: http://www.kalaamkathir.blogspot.com/

Annamalai University Study Centre in Riyadh

Annamalai University Study Centre in Riyadh which offers the following Overseas Programmes attached here for your reference. We would like you to share this information to as many interested candidates as possible. We really appreciate your efforts in empowering the Indian community and others in the pursuit of Higher Education. Should you need any more clarifications, please feel free to contact us.

With regards

DAR AL MAHRAJAN EST. Riyadh (Edu. Services)Annamalai University Study Centre, Riyadh
Office Telephone: 01-4778871
Fax: 01-4770551Mobile: -0552566591--0552565898-- 0556283704
Email: anu_ksa@yahoo.com

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?

தமிழக முஸ்லிம்களிடையே செயல்பட்டுவரும் இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்கள், ஜகாத் நிதியை முக்கிய ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இதர அமைப்புகள், மதரஸாக்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்தால் மலைத்துப் போய்விடுவோம். இந்தச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஜகாத்தை முறைப்படி செயல்படுத்துவதன் மூலம் மார்க்கத்தின் தூணாகிய கடமையை நிலைநிறுத்துவது, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படச் செய்வது என்ற உயரிய நோக்கம் கொண்ட யாருக்கும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் பெரிதாக ஆட்சேபனை இருக்கப் போவதில்லை.

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பை நிறுவுவதற்கான சில ஆலோசனைகள்:

நிறுவன அமைப்பு: இந்த ஜகாத் அமைப்பு, வக்ஃப் வாரியம் போன்றல்லாது அரசு சாராத நிறுவனமாக, முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களால், முஸ்லிம்களின் நிதியைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஓர் இஸ்லாமிய அமைப்பையோ இயக்கத்தையோ சார்ந்திராமல் அதே சமயத்தில் எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானதாகவும் இந்த அமைப்பு செயல்பட வேண்டும். தலைமை, நிர்வாகக்குழு நியமனங்கள், நிதி மேலாண்மை, செலவினங்கள் ஆகியவற்றில் வெளியாரின் தலையீடு இன்றி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகக்குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்.

தலைமை மற்றும் நிர்வாகக்குழு: மார்க்கப் பற்றுடைய, சமுதாய நலனில் அக்கறையும் சமுதாயச் சேவையில் ஆர்வமும் அனுபவமும் உடைய 10 அல்லது 12 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் இயக்கங்களைச் சேர்ந்த தகுதியானவர்களை நிர்வாகக்குழு உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்யலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட நிர்வாகக்குழு, தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைப்பின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா முடிவுகளையும் நிர்வாகக்குழுவும் தலைவரும் 'ஷூரா' எனும் கலந்தாலோசனை அடிப்படையில் எடுக்க வேண்டும்.

வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள்: முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஜகாத் அமைப்பிற்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரதிநிதிகள் அவ்வட்டாரத்து முஸ்லிம்களின் வாழ்க்கைநிலை பற்றிய தகவல்கள் சேகரித்தல், ஜகாத் பெறத் தகுதியுடைய குடும்பத்தினரை அடையாளம் காணல், அவர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு பரிந்துரை செய்தல், ஜகாத் வசூல், வினியோகத்தில் உதவி போன்ற பணிகளுடன், சுருக்கமாக ஜகாத் அமைப்பிற்கும் அந்த வட்டார முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பாலமாக செயல்பட வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் அந்தந்த வட்டார மஸ்ஜிதுகளின் இமாம்கள், முஅத்தின்கள், மதரஸா ஆசிரியர்கள் ஆகியோர். இவர்களுள் பெரும்பாலானோரே ஜகாத் பெறத் தகுதியுடையோராகவும் இருக்கின்றனர். அடுத்ததாக, இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் தங்கள் இயக்கத் தொண்டர்களை ஜகாத் அமைப்பின் பிரதிநிதிகளாகவும் களப்பணியாளர்களாகவும் சேவையாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

ஜகாத் அமைப்பின் செயல்பாடுகள்:

துணைக்குழுக்கள்: நிர்வாகக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்ட துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பின் பணிகள் அந்தத் துணைக்குழுக்களிடம் பகிர்ந்தளிக்கப்படலாம். துணைக்குழுக்களில் நிர்வாகக்குழுவின் பிரதிநிதிகளோடு தகுதியான உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

மக்கள் தொடர்பு, தகவல் சேகரிப்பு, ஆய்வு: ஜகாத் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளவர்களிடமும் ஜகாத் பெறத் தகுதியுடையோரிடமும் ஜகாத் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை ஆராய்ந்து சரியான புள்ளிவிவரங்களையும் ஆய்வறிக்கைகளையும் தயாரித்து நிர்வாகக்குழுவிடம் சமர்ப்பித்தல், ஜகாத் நிதியுதவிக்கான விண்ணப்பங்களையும் பிரதிநிதிகளின் பரிந்துரைகளையும் பரிசீலித்து அவற்றைத் தொகுத்தல் ஆகிய பணிகள் இந்தத் துணைக்குழு மேற்கொள்ளும்.
மனிதவளம்: அமைப்பிற்கான முழுநேரப் பணியாளர்கள், வட்டாரப் பிரதிநிதிகள் ஆகியோரை நியமித்தல், அவர்களுக்கான ஊதியங்களை நிர்ணயித்தல், முறையான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவை மனிதவள மேம்பாட்டுக் குழுவின் பொறுப்பாக இருக்கும்.
திட்டக்குழு: அரசாங்கப் புள்ளி விவரங்கள், ஆய்வுக்குழுவினரின் புள்ளிவிவரங்கள், ஆய்வறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஓராண்டிற்கான ஜகாத் வினியோகத் திட்ட வரையறையை தயாரித்தல், அதன்படி வினியோகம் செய்யப்படுகிறதா என மேற்பார்வையிடல் போன்ற பணிகள் திட்டக்குழுவிடம் ஓப்படைக்கப்படலாம்
நிதி நிர்வாகம்: ஜகாத் வசூல் மற்றும் வினியோகத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்துதல், வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல் போன்ற பணிகள் நிதி நிர்வாகக் குழுவின் பொறுப்பில் விடப்படலாம். இக்குழுவின் இன்னொரு மிக முக்கியமான பணி ஆண்டறிக்கைகளை தயாரித்து வெளியிடல். அமைப்பின் செயல்பாடுகள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி தகுந்த நேரத்தில் வெளியிடப்பட்டால் மட்டுமே அது சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெற்று அமைப்பு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட வழிவகுக்கும்.
தணிக்கை: அமைப்பின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யத் தணிக்கையாளர்களை நியமிப்பது மட்டுமல்லாமல், வட்டாரப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்யவும் தன்னார்வல தணிக்கையாளர்களை நியமிப்பது இக்குழுவின் பணி. சுமார் 10 வட்டாரப் பிரதிநிதிகளுக்கு ஒரு தணிக்கையாளர் எனும் எண்ணிக்கையில் நியமனங்கள் செய்யப்படலாம். அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள், பட்டதாரிகள் போன்றோர் கௌரவ தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் கணக்கு வழக்குகளைத் தணிக்கைச் செய்து தலைமைக்கு அறிக்கை அளிக்கும்படிச் செய்யலாம்.
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!ஒருங்குறியில்

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

பேரன்புடையீர்,

வணக்கம்.கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. இதில் பங்கேற்கஒருங்குறியில் தமிழ்க்காப்புஎன்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும். தொடர்பிற்கான பேசி எண்கள்: 98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)

94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்)கெடல்எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! - பாவேந்தர் பாரதிதாசன்அன்பன்
இலக்குவனார் திருவள்ளுவன் ஒருங்கிணைப்பாளர் , தமிழ்க்காப்பு அமைப்புகள்

List of Restricted Medication in the UAE

Dear All,

Recently an Indian national traveler has been caught in the SHARJAH International Airport for bringing the restricted medicines from India in to UAE along with prescription sheet.

He has been undergone intensive investigation with lot of sufferings for 2 days prior to release after a lot of efforts has been taken through Indian consulate.If you like to bring any medicines legally then it should be attested by Home Ministry of our country. Indeed it is a tedious and lengthy process.Please read the article by the United States Embassy in UAE for the same.

Check the medicines before bringing in to UAE whether it is listed in the following restricted list or not.

Best Regards,

S. Ameenudeen

http://abudhabi.usembassy.gov/restricted_medication_.htmlInformation for

TravelersList of Restricted Medication in the UAE

Below is a list of Controlled Medicines and Medications, registered with the Ministry of Health in the UAE and enforced by the UAE Ministry of Interior and International Narcotic Controlled Board (INCB).

These items are essentially available only in hospitals and in large community pharmacies, under the prescription of doctors. The Ministry of Health advises that unlicensed, controlled medicines can only be imported into the UAE through hospitals and not by individuals.

However, the Drug Control Department of the Ministry of health does have special regulations for personal import of such items: patients or travelers carrying prescribed prescription medications must have their prescriptions issued by licensed U.S. doctors, attested by a notary public, and duly authenticated by both the secretary of state of one’s U.S. state, and finally also authenticated by the Secretary of State of the U.S. Government in Washington, D.C.

Further queries may be directed to the UAE Ministry of Health’s Drug Control Department in Abu Dhabi, P.O. Box 848, Fax: 971 2 6313 742.

S.No., TRADE NAME, GENERIC NAME, FORM

1, 123 COLD Tablets, Codeine phosphate 8mg, Acetaminophen 325mg,Cafeine 30mg,Carbinoxamine maleate 3.06mg,Phenylephrine 5mg, Tablets
2, ABILIFY 10mg, Aripiprazole 10mg, Tablets
3, ABILIFY 15mg, Aripiprazole 15mg, Tablets
4, ABILIFY 20mg, Aripiprazole 20mg, Tablets
5, ABILIFY 30mg, Aripiprazole 30mg, Tablets
6, ACTIFED compound linctus, Codeine Phosphate10mg, Triprolidine1.25mg, Pseudoephedrine 30mg/5ml, Linctus
7, ACTIFED DM, Dextromethorphan 10mg , Triprolidine1.25mg, Pseudoephedrine 30mg/5ml, Linctus
8, ACTIVELLE , Estradiol & Norethisterone, Tablets
9, ADOL cold, Dextromethorphan HBr 15mg, Pseudoephedrine HCL 30mg, Paracetamol 325mg, Caplets
10, ADOL COLD HOT THERAPY, Paracetamol 650mg, Pseudoephedrine HCL 60.0 mg, Dextrometorphan HBr 30.0 mg, Sachets
11, ADOL compound, Codeine phosphate 10mg, Paracetamol 150mg,Cafeine 50mg,Salicylamide 200mg, Tablets
12, AKINETON 2mg, Biperiden HCL 2mg, Tablets
13, AKINETON 5mg, Biperiden Lactate 5mg/ml, Injection
14, AKINETON RETARD 4mg, Biperiden HCL 4mg, Tablets
15, ALGAPHAN, Dextropropoxyphene HCL 25mg Paracetamol 300mg, Tablets
16, ALGAPHAN, Propoxyphene HCL 75mg Chlorobutanol 10 mg/2ml, Injection
17, ANAFRANIL 10, Clomipramine HCL 10 mg, Tablets
18, ANAFRANIL 25, Clomipramine HCL 25 mg, Tablets
19, ANAFRANIL S.R 75, Clomipramine HCL 75 mg, Tablets
20, ANDRIOL 40mg, Testosterone undecanoate 40mg, Capsules
21, ANEXATE 0.5mg/5ml, Flumazenil 0.1mg/ml, Injection
22, ANEXATE 1mg/10ml, Flumazenil 0.1mg/ml, Injection
23, ARTANE 2, Benzhexol HCL 2 mg, Tablets
24, ARTANE 5, Benzhexol HCL 5mg, Tablets
25, ARTHROTEC 50, Misoprostol 0.2mg Diclofenac sodium 50mg, Tablets
26, ATIVAN 1, Lorazepam 1mg, Tablets
27, AURIMEL, Carbinoxamine maleate 2mg , Dextromethorphan HBr 5mg , Phenylephrine HCL 5mg , Sodium citrate 325 mg/5ml, Syrup
28, AURORIX 100, Moclobemide 100mg, Tablets
29, AURORIX 150, Moclobemide 150mg, Tablets
30, AURORIX 300, Meclobemide 300 mg, Tablets
31, BARNETIL 200mg/2ml, Sultopride 200mg/2ml, Injection
32, BARNETIL 400, Sultopride 400mg, Tablets
33, BENZTRONE 5mg/ml, Oestradiol Benzoate 5mg/ml, Injection
34, BEPRO, Papaverine HCL 12.5mg, Codeine Sulphate 125mg, Calcium Iodide 1gm, Glycerine 5gm/100ml, Syrup
35, BRONCHOLAR, Dextromethorphan HBr 7.5mg Guaifenesin 50mg,Ephedrine HCl 7.5mg,Chlorpheniramine maleate 1.25mg/5ml, Mixture
36, BRONCHOLAR forte, Dextromethorphan HBr 15mg Ephedrine HCL 7.5mg,Guaifenesin 50mg,Chlorpheniramine maleate 1.25mg/5ml, Mixture
37, BRONCHOPHANE, Dextromethorphan HBr 125mg Diphenydramine HCl 100mg,Ephedrine HCl 150mg,Guaifenesin 1gm/100ml, Syrup
38, BUCCASTEM 3mg, Prochlorperazine Maleate 3mg, Tablets
39, BUSPAR 10 , Buspirone HCL 10mg, Tablets
40, BUSPAR 30 mg, Buspirone HCl 30 mg, Tablets Dividose
41, BUSPAR 5 , Buspirone HCL 5 mg, Tablets
42, CAMCOLITE 250, Lithium Carbonate 250mg, Tablets
43, CAMCOLITE 400, Lithium Carbonate 400mg, Tablets
44, CANTOR 50, Minaprine 50mg, Tablets
45, CELLCEPT 250mg, Mycophenolate mofetil 250mg, Capsules
46, CELLCEPT 500mg, Mycophenolate mofetil 500mg, Capsules
47, CIPRALEX 10mg, Escitalopram (as Escitlopram oxalate) 10mg/tablet, Tablets
48, Cipralex 10mg, Escitalopram, Tablet
49, CIPRALEX 15mg, Escitalopram (as Escitlopram oxalate) 15mg/tablet, Tablets
50, Cipralex 15mg, Escitalopram, Tablet
51, CIPRALEX 20mg, Escitalopram (as Escitlopram oxalate) 20mg/tablet, Tablets
52, Cipralex 20mg, Escitalopram, Tablet
53, CIPRALEX 5mg, Escitalopram (as Escitlopram oxalate) 5mg/tablet, Tablets
54, CIPRAM 20, Citalopram 20 mg, Tablets
55, CLIMEN, Micronised Estradiol Valerate(pink) 2mg/1tab, Micronised Estradiol Valerate(white) 2mg/1tab, Micronised Cyproterone Acetate (Pink) 1mg/1 tab., Tablets
56, CLOPIXOL 2, Zuclopenhtixol diHCL 2mg, Tablets
57, CLOPIXOL 25, Zuclopenhtixol diHCL 25mg, Tablets
58, CLOPIXOL -Acuphase 100mg, Zuclopenhtixol acetate 100mg/2ml, Injection
59, CLOPIXOL Depot 200, Zuclopenhtixol decanoate 200mg/ml, Injection
60, CLOPIXOL Depot 500, Zuclopenhtixol acetate 500mg/ml, Injection
61, CLOPIXOL10, Zuclopenhtixol diHCL 10mg, Tablets
62, CLOPIXOL-Acuphase 50mg, Zuclopenhtixol acetate 50mg/ml, Injection
63, CODAPHED, Codeine phosphate 8mg Chlorpheniramine maleate 2mg , Ephedrine HCL 15mg/10ml, Syrup
64, Codaphed Plus, Chlorpheniramine Maleate Ephedrine HCl,Codeine Phosphate,Ammonium Chloride , Syrup
65, CODILAR, Dextromethorphan HBr100mg Phenylephrine HCL 40mg,Chlorpheniramine maleate 20mg/100ml, Syrup
66, CODIPRONT, Codeine 30mg, Phenyltoloxamine 10mg, Capsules
67, CODIPRONT , Codeine 11.1mg , Phenyltoloxamine 3.7mg/5ml, Syrup
68, CODIPRONT Cum Exp., Codeine 200mg , Guaiphenesine 1gm,Phenyltoloxamine 66mg , Thyme ext. 1gm/100gm, Syrup
69, CODIPRONT Cum Exp., Codeine 30mg , Phenyltoloxamine 10mg,Guaifenesin 100mg, Tablets
70, CODIS, Aspirin 500 mg,Codeine Phosphate 8 mg, Tablets
71, COLDEX-D, Dextromethorphan HBr 10mg , Pseudoephedrine HCl 30mg, Chlorpheniramine maleate 1.25mg, Glyceryl guaicolate 50mg/5ml, Syrup
72, CYTOTEC, Misoprostol 200mcg, Tablets
73, DEANXIT, Flupentixol diHCL 0.5mg, Melitracene HCL 10mg, Tablets
74, DECA DURABOLIN 25mg/ml, Nandrolone Decanoate 25mg/ml, Injection
75, DECA DURABOLIN 50mg/ml, Nandrolone Decanoate 50mg/ml, Injection
76, DEHYDROBENZ-PERIDOL , Droperidol 2.5mg/ml, Injection
77, DEMETRIN 10, Prazepam 10mg, Tablets
78, DEXTROKUF , Dextromethorphan HBr 15mg/5ml, Syrup
79, DEXTROLAG, Dextromethorphan HBr 10mg , Guaifenesin 100mg, Chlorpheniramine maleate 2mg,Amonium chloride 25mg/5ml, Syrup
80, DHC CONTINUS, Dihydrocodeine tartrate 60mg, Tablets
81, DIALAG microclysma, Diazepam 5mg/2.5ml, Rectal solution
82, DIALAG microclysma, Diazepam 10mg/2.5ml, Rectal solution
83, DIAPAM 10, Diazepam 10mg, Tablets
84, DIAPAM 2, Diazepam 2mg, Tablets
85, DIAPAM 5, Diazepam 5mg, Tablets
86, DIARSED, Diphenoxylate HCL 2.5mg , Atropine sulphate 0.025mg, Tablets
87, DIAXINE, Diphenoxylate HCl 2.5mg, Atropine sulphate 0.025mg, Tablets
88, DIAZEPAM 2, Diazepam 2mg, Tablets
89, DIAZEPAM 5, Diazepam 5mg, Tablets
90, DICTON retard 30, Codeine 11mg , Carbinoxamine 1.5mg/5ml, Syrup
91, DIPRIVAN 1% w/v, Propofol 1.00% w/v, I.V. Infusion
92, DIPRIVAN 2% w/v, Propofol 20mg/1ml, I.V. Infusion
93, DISTALGESIC, Propoxyphene HCL 32.5mg Paracetamol 325mg, Tablets
94, DOGMATIL 100, Sulpiride 100 mg/2ml, Injection
95, DOGMATIL 25mg/5ml, Sulpiride 25mg/5ml, Solution
96, DOGMATIL 50, Sulpiride 50 mg, Capsules
97, DOGMATIL Forte, Sulpiride 200 mg, Tablets
98, DORMICUM 15, Midazolam 15mg, Tablets
99, DORMICUM 15mg/3ml, Midazolam 15mg/3ml, Injection
100, DORMICUM 5mg/ml, Midazolam 5mg/ml, Injection
101, DORMICUM 7.5mg, Midazolam 7.5mg, Tablets
102, DORSILON, Mephenoxalone 200mg,Paracetamol 450mg , Tablets
103, EDRONAX 4mg, Reboxetine 4mg, Tablets
104, EFEXOR 37.5, Venlafaxine 37.5mg, Tablets
105, EFEXOR 75, Venlafaxine 75mg, Tablets
106, EFEXOR XR 150, Venlafaxine Hydrochloride 150mg, Capsules
107, EFEXOR XR 75, Venlafaxine Hydrochloride 75mg, Capsules
108, ESTRACOMB TTS, Oestradiol 4mg,Norethisterone acetate 30mg(Patch 1)+Oestradiol 10mg(Patch 2), Patches
109, ESTRADERM TTS 100, Estradiol 8mg/20cm2, Patches
110, ESTRADERM TTS 25, Estradiol 2mg/5cm2, Patches
111, ESTRADERM TTS 50, Estradiol 4mg/10cm2, Patches
112, ESTROFEM , Oestradiol 2mg, Tablets
113, ESTROFEM FORTE, Oestradiol 4mg, Tablets
114, FAVERIN 100, Fluvoxamine maleate 100mg, Tablets
115, FAVERIN 50, Fluvoxamine maleate 50mg, Tablets
116, FEMOSTON 2/10, Dydrogesterone (Y) 10mg, Estradiol (O) 2.0mg, Estradiol (Y) 2.0mg, Tablets
117, FLEXIBAN, Cyclobenzaprine HCL 10mg/tab., Tablets
118, FLUANXOL 0.25, Flupenthixol 0.25mg, Tablets
119, FLUANXOL 0.5, Flupenthixol 0.5mg, Tablets
120, FLUANXOL 1, Flupenthixol 1mg, Tablets
121, FLUANXOL 3, Flupenthixol 3mg, Tablets
122, FLUANXOL Depot, Flupenthixol 20mg/ml, Injection
123, FLUANXOL Depot, Flupentixol decanoate 100mg/ml, Injection
124, FLUOXONE DIVULE, Fluoxetine 22.4mg, Capsules
125, FLUNEURIN 20mg, Fluoxetin 20mg/1capsule, Capsules
126, FLUTIN 20mg, Fluoxetine Hydrochloride 20mg, Capsules
127, FLUXETYL 20mg, Fluoxetine ( as F. Hydrochloride) 20mg/capsule, Capsules
128, FRISIUM 10, Clobazam 10 mg, Tablets
129, FRISIUM 20, Clobazam 20 mg, Tablets
130, GARDINAL SODIUM, Phenobarbitone sodium 200mg/ml, Injection
131, GENOTROPIN 16 IU (5.3mg), Somatropin 16IU/1Cartridge, Powder for Injection
132, GENOTROPIN 36 IU (5.3mg), Somatropin 36IU/1Cartridge, Powder for Injection
133, HALDOL 0.5, Haloperidol 0.5mg, Tablets
134, HALDOL 2mg/ml, Haloperidol 2mg/ml, Drops
135, HALDOL 5, Haloperidol 5mg, Tablets
136, HALDOL 5mg/ml, Haloperidol 5mg/ml, Injection
137, HALDOL Decanoas, Haloperidol 50mg/ml, Injection
138, HALDOL Decanoas, Haloperidol 100mg/ml, Injection
139, HEMINEVRIN, Chlormethiazole 300mg, Miglyol(812) 125mg, Capsules
140, IMUKIN 100mcg/0.5ml, Recombinant Human Interferon-gamma 6000000 IU/ml, Injection*
141, INSIDON 50, Opipramol 50mg, Tablets
142, INTARD, Diphenoxylate HCl 2.5mg, Atropine sulphate 0.025mg, Tablets
143, INTRAVAL, Thiopentone Sodium 0.5g/1vial, Injection
144, IXEL 25mg, Milnacipran 25mg/capsule, Capsules
145, IXEL 50mg, Milnacipran 505mg/capsule, Capsules
146, KAFOSED, Dextromethorphan HBr 15mg/5ml, Syrup
147, KEMADRIN 10mg/2ml, Procyclidine HCL 10mg/2ml, Injection
148, KEMADRIN 5mg, Procyclidine HCL 5mg, Tablets
149, KETALAR 10, Ketamine HCL 10mg/ml, Injection
150, KETALAR 50, Ketamine HCL 50mg/ml, Injection
151, KLIOGEST, Oestradiol 2mg,Norethisterone 1mg, Tablets
152, LAGAFLEX, Carisoprodol 300 mg,Paracetamol 250mg, Tablets
153, LARGACTIL, Chlorpromazine HCL 25mg/5ml, Syrup
154, LARGACTIL 10, Chlorpromazine HCL 10mg, Tablets
155, LARGACTIL 100, Chlorpromazine HCL 100mg, Tablets
156, LARGACTIL 25, Chlorpromazine HCL 25mg, Tablets
157, LARGACTIL 25mg/ml, Chlorpromazine HCL 25mg/ml, Injection
158, LARGACTIL 50, Chlorpromazine HCL 50mg, Tablets
159, LARGACTIL 50mg/2ml, Chlorpromazine HCL 50mg/2ml, Injection
160, LARGACTIL100, Chlorpromazine HCL 100mg, Suppo.
161, LEXOTANIL 1.5, Bromazepam 1.5 mg, Tablets
162, LEXOTANIL 3, Bromazepam 3 mg, Tablets
163, LEXOTANIL 6, Bromazepam 6 mg, Tablets
164, LIMBITROL, Amitriptyline 12.5 mg, Chlordiazepoxide 5 mg, Capsules
165, LIORESAL 10, Baclofen 10 mg, Tablets
166, LIORESAL 25, Baclofen 25 mg, Tablets
167, LOMOTIL, Diphenoxylate HCl 2.5mg, Atropine sulphate 0.025mg, Tablets
168, LUDIOMIL 10, Maprotiline HCL 10mg, Tablets
169, LUDIOMIL 25, Maprotiline HCL 25mg, Tablets
170, LUDIOMIL 50, Maprotiline HCL 50mg, Tablets
171, LUDIOMIL 75, Maprotiline HCL 75mg, Tablets
172, MELLERIL 0.5%, Thioridazine HCL 0.5%, Susp.
173, MELLERIL 10, Thioridazine HCL 10mg, Tablets
174, MELLERIL 100, Thioridazine HCL 100mg, Tablets
175, MELLERIL 25, Thioridazine HCL 25mg, Tablets
176, MELLERIL 50, Thioridazine HCL 50mg, Tablets
177, MENOGON 75IU, Menotrophin HMG 75IU/1Ampoule, Injection
178, MUSCADOL, Orphenadrine citrate 35mg , Paracetamol 450mg, Tablets
179, MYOGESIC, Orphenadrine 35mg,Paracetamol 450mg, Tablets
180, NEOTIGASON 10, Acitretin 10 mg, Capsules
181, NEOTIGASON 25, Acitretin 25 mg, Capsules
182, NOBRIUM 10, Medazepam 10mg, Capsules
183, NOBRIUM 5, Medazepam 5mg, Capsules
184, NOCTRAN 10, Clorazepate dipotassium 10mg, Acepromazine maleate 1.016mg, Aceprometazine maleate 10.16mg, Tablets
185, NORACOD, Codeine 10mg,Paracetamol 500mg, Tablets
186, NORCURON 10mg, Vecuronium Bromide 10mg/ampoule, Powder for injection
187, NORCURON 4mg, Vecuronium Bromide 4.0mg/ampoule, Powder for injection
188, NORDITROPIN 12IU, Somatropine 12 IU, Injection
189, NORDITROPIN 4IU, Somatropine 4 IU, Injection
190, NORDITROPIN Pen set 12, Somatropine 12 IU, Injection S/C
191, NORDITROPIN Pen set 24, Somatropine 24 IU, Injection S/C
192, Norditropin SimpleXx
10mg/1.5ml, Somatropin, Inj/
Solution
193, Norditropin SimpleXx
15mg/1.5 ml, Somatropin, Inj/
Solution
194, Norditropin SimpleXx
5mg/1.5 ml, Somatropin, Inj/
Solution
195, Norditropin Nordilet
5mg/1.5 ml, Somatropin, Inj in Prefilled pen
196, Norditropin Nordilet
10mg/1.5 ml, Somatropin, Inj. in Prefilled pen
197, Norditropin Nordilet
15mg/1.5 ml, Somatropin, Inj. in Prefilled pen
198, NORFLEX, Orphenadrine citrate 30mg/ml, Injection
199, NORFLEX 100, Orphenadrine citrate 100mg, Tablets
200, NORGESIC, Orphenadrine citrate 35mg Paracetamol 450mg, Tablets
201, NUBAIN 10mg/ml, Nalbuphine HCL 10mg/ml, Injection
202, NUBAIN 20mg/ml, Nalbuphine HCL 20mg/ml, Injection
203, Nuvaring, Etonogestrel & Ethinylestradiol, Vaginal Ring
204, ORAP , Pimozide 1mg, Tablets
205, ORAP Forte, Pimozide 4mg, Tablets
206, OXETINE, Fluoxetine Hydrochloride 20mg, Tablets
207, PARACODOL, Codeine phosphate 8mg , Paracetamol 500mg, Eff.Tab.
208, PARACODOL, Codeine phosphate 8mg , Paracetamol 500mg, Tablets
209, PHENSEDYL, Codeine phosphate 8.9mg Promethazine HCL 3.6mg Ephedrine HCL 7.2mg/5ml, Linctus
210, PHYSEPTONE, Methadone HCL 10mg/ml, Injection
211, PHYSEPTONE 5, Methadone HCL 5mg, Tablets
212, PREPULSID, Cisapride 1mg/ml, Suspension
213, PREPULSID, Cisapride 30mg, Supp.
214, PREPULSID 10mg, Cisapride 10mg, Tablets
215, PREPULSID 5mg, Cisapride 5mg, Tablets
216, PRIMOTESTONE depot 100mg, Testosterone Enanthate 110mg, Testosterone Propionate 25mg, =Testosterone 100mg /ml , Injection
217, PRIMOTESTONE depot 250mg, Testosterone enanthate 250mg/1ml , Injection
218, PROGYLUTON, Estradiol Valerate 2mg/11white tab., Estradiol Valerate 2mg &Norgestrol 0.5mg/10 orange tab., Tablets
219, PROKINATE, Cisapride 5mg/5ml, Suspension
220, PROKINATE 10mg, Cisapride 10mg, Tablets
221, PROKINATE 5mg, Cisapride 5mg, Tablets
222, PROLIXIN 25mg/ml, Fluphenazine decanoate 25mg/ml, Injection
223, PROPESS, Prostaglandin E2 10mg/pessary, Vaginal Pessaries
224, PROTHIADEN 25, Dothiepin HCl 25mg, Capsules
225, PROTHIADEN 75, Dothiepin HCl 75mg, Tablets
226, PROVIRON, Mesterolone 25mg, Tablets
227, PROZAC, Fluoxetine 20mg, Tablets
228, PROZAC, Fluoxetine 20mg/5ml, Liquid
229, PROZAC Weekly 90mg , Fluoxetine ( as F. Hydrochloride) 90mg/capsule, Capsules
230, REDUCTIL 10mg, Sibutramine Hydrochloride Monohydarte 10mg, Capsules
231, REDUCTIL 15mg, Sibutramine Hydrochloride Monohydarte 15mg, Capsules
232, REMERON 15 mg, Mirtazapine 15mg, Tablets
233, REMERON 30 mg, Mirtazapine 30mg, Tablets
234, REMERON 45 mg, Mirtazapine 45mg, Tablets
235, Remeron Sol Tab 30mg , Mirtazapine, Tablets
236, REVACOD, Codeine Phosphate 10mg, Paracetamol 500mg/1 tab., Tablets
237, RHINOTUSSAL, Dextromethorphan HBr 20mg Phenylephrine HCL 20mg,Carbinoxamine maleate 4mg, Capsules
238, RIAPHAN 15mg/5ml, Dextromethorphan HBr 15mg/5ml, Syrup
239, RISPERDAL 1, Risperidone 1mg, Tablets
240, RISPERDAL 1mg/ml, Risperidone 1mg/1ml, Oral Solution
241, RISPERDAL 2, Risperidone 2mg, Tablets
242, RISPERDAL 3, Risperidone 3mg, Tablets
243, RISPERDAL 4, Risperidone 4mg, Tablets
244, Risperidal Consta 25mg, Risperidone, Inj/ Suspension
245, Risperidal Consta 37.5 mg, Risperidone, Inj/ Suspension
246, Risperidal Consta 50 mg, Risperidone, Inj/ Suspension
247, RITALIN 10, Methylphenidate HCL 10mg, Tablets
248, RITALIN SR 20mg, Methylphenidate HCL 20mg/1tab., Tablets
249, RIVOTRIL 0.25%, Clonazepam 0.25%, Drops
250, RIVOTRIL 0.5, Clonazepam 0.5 mg, Tablets
251, RIVOTRIL 1mg/ml, Clonazepam 1mg/ml, Injection
252, RIVOTRIL 2, Clonazepam 2mg, Tablets
253, ROACCUTANE 10, Isotretinoin 10mg, Capsules
254, ROACCUTANE 2.5, Isotretinoin 2.5mg, Capsules
255, ROACCUTANE 20, Isotretinoin 20mg, Capsules
256, ROACCUTANE 5, Isotretinoin 5mg, Capsules
257, ROBAXIN, Methocarbamol 100mg/ml, Injection
258, ROBAXIN 500, Methocarbamol 500mg, Tablets
259, ROBAXISAL, Methocarbamol 400mg,Aspirin 325mg, Tablets
260, ROBITUSSIN-CF, Dextromethorphan HBr 10mg , Guaifenesin 100mg,Pseudoephedrine HCl 30mg /5ml, Syrup
261, ROMILAR 1.5%, Dextromethorphan 15mg/ml, Drops
262, ROMILAR 15, Dextromethorphan 15mg, Dragees
263, ROMILAR EXPECTORANT, Dextromethorphan 3.06mg , Ammonium chloride 18mg, Panthenol 11mg/1ml, Syrup
264, SAIZEN 4 IU, Somatropine 4 IU, Injection
265, SALIPAX, Fluoxetine 20mg, Capsules
266, SANDOSTATIN 0.05, Octreotide 0.05mg/ml, Injection
267, SANDOSTATIN 0.1, Octreotide 0.1mg/ml, Injection
268, SANDOSTATIN 0.2, Octreotide 0.2mg/ml, Injection
269, SANDOSTATIN 0.5, Octreotide 0.5mg/ml, Injection
270, SAROTEN Retard 25, Amitriptyline HCL 25 mg, Capsules
271, SAROTEN Retard 50, Amitriptyline HCL 50 mg, Capsules
272, SEDOFAN DM, Dextromethorphan HBr 10mg Triprolidine 1.25mg, Pseudoephedrine HCL 30mg/5ml, Syrup
273, SEDOFAN-P, Dextromethorphan HBr 15mg, Tablets
274, SERENACE 0.5, Haloperidol 0.5mg, Tablets
275, SERENACE 1.5, Haloperidol 1.5mg, Tablets
276, SERENACE 10, Haloperidol 10mg, Tablets
277, SERENACE 5, Haloperidol 5mg, Tablets
278, SEROQUEL 100 mg, Quetiapine 100 mg, Tablets
279, SEROQUEL 200 mg, Quetiapine 200 mg, Tablets
280, SEROQUEL 25 mg, Quetiapine 25 mg, Tablets
281, SEROQUEL Patient Starter Pack, Quetiapine 100 mg/tab. (2 tablets), Quetiapine 25 mg/tab. (6 tablets), Tablets
282, SEROXAT 20, Paroxetine 20mg, Tablets
283, SERZONE 100mg, Nefazodone HCL 100mg, Tablets
284, SERZONE 150mg, Nefazodone HCL 150mg, Tablets
285, SERZONE 200mg, Nefazodone HCL 200mg, Tablets
286, SERZONE 250mg, Nefazodone HCL 250mg, Tablets
287, SERZONE 50mg, Nefazodone HCL 50mg, Tablets
288, SIRDALUD 2, Tizanidine 2mg, Tablets
289, SIRDALUD 4, Tizanidine 4mg, Tablets
290, SOMADRYL compound, Carisoprodol 200mg Paracetamol 160mg,Caffeine 32mg, Tablets
291, SONATA 10mg, Zaleplon 10mg/1capsule, Capsules
292, SONATA 5mg, Zaleplon 5mg/1capsule, Capsules
293, SOSEGON 50mg, Pentazocine HCL 56.4mg, Tablets
294, ST.JOSEPH cough, Dextromethorphan HBr 0.1179%w/w, Syrup
295, STADOL 1mg/ml, Butorphanol tartrate 1mg/ml, Injection
296, STADOL 2mg/ml, Butorphanol tartrate 2mg/ml, Injection
297, STADOL 4mg/2ml, Butorphanol tartrate 4mg/2ml, Injection
298, STELAZINE 1, Trifluoperazine 1mg, Tablets
299, STELAZINE 10, Trifluoperazine 10mg, Capsules
300, STELAZINE 15, Trifluoperazine 15mg, Spansule
301, STELAZINE 2, Trifluoperazine 2mg, Spansule
302, STELAZINE 5, Trifluoperazine 5mg, Tablets
303, STEMETIL, Prochlorperazine maleate 0.1%w/v, Syrup
304, STEMETIL, Prochlorperazine maleate 25mg, Tablets
305, STEMETIL, Prochlorperazine maleate 5mg, Tablets
306, STEMETIL, Prochlorperazine maleate12.5mg/ml, Injection
307, STEMETIL, Prochlorperazine maleate 25mg/2ml, Injection
308, STERANDRYL RETARD 250mg, Testosterone Hexahydrobenzoate 125mg, Trans-hexahydroterephtalate of n-butyl and Testosterone 125mg/ampoule, Injection
309, STESOLID, Diazepam 0.4mg/ml, Syrup
310, STESOLID, Diazepam 2mg, Tablets
311, STESOLID, Diazepam 5mg, Tablets
312, STESOLID, Diazepam 5mg/ml, Injection
313, STESOLID, Diazepam 5mg/2.5ml, Rectal solution
314, STESOLID, Diazepam 10mg/2.5ml, Rectal solution
315, STILNOX 10mg, Zolpidem Tartrate 10mg/1 tab., Tablets
316, STIVANE 300, Pyrisuccideanol dimaleate 300mg, Capsules
317, SUBUTEX 2mg, Buprenorphine HCL 2mg/1tab., Tablets
318, SUBUTEX 8mg, Buprenorphine HCL 8mg/1tab., Tablets
319, SURMONTIL 25, Trimipramine maleate 35mg, Tablets
320, SURMONTIL 50, Trimipramine maleate 69.75mg, Capsules
321, SUSTANON 250mg, Testosterone Propionate 30mg, Testosterone Phenylpropionate 60mg, Testosterone isocaproate 60mg, Testosterone decanoate 100mg, Injection
322, TEKAM 10, Ketamine HCL 10mg/ml, Injection
323, TEKAM 50, Ketamine HCL 50mg/ml, Injection
324, TEMGESIC 0.3mg/ml , Buprenorphine HCL 0.3 mg/ml, Injection
325, TEMGESIC 0.6mg/2ml, Buprenorphine HCL 0.6mg/2ml, Injection
326, TEMGESIC Sublingual, Buprenorphine HCL 0.2 mg, Tablets
327, TIAPRIDAL 100, Tiapride 100mg, Tablets
328, TIAPRIDAL 100mg/2ml, Tiapride 100mg/2ml, Injection
329, TICLID, Ticlopidine 250mg, Tablets
330, TIXYLIX, Pholcodine 1.5mg Promethazine HCL 1.5mg/5ml, Linctus
331, TOFRANIL 10, Imipramine 10mg, Tablets
332, TOFRANIL 25, Imipramine 25mg, Tablets
333, TRAMAL 100mg, Tramadol 100mg, Supp.
334, TRAMAL 100mg/2ml, Tramadol 100mg/2ml, Injection
335, TRAMAL 100mg/ml, Tramadol 100mg/ml, Drops
336, TRAMAL 50mg, Tramadol 50mg, Capsules
337, TRAMAL 50mg/ml, Tramadol 50mg/ml, Injection
338, TRAMAL Retard 100, Tramadol 100mg, Tablets
339, TRAMUNDIN RETARD 100 mg, Tramadol 100mg, Tablets
340, TRAMUNDIN RETARD 150 mg, Tramadol 150mg, Tablets
341, TRAMUNDIN RETARD 200 mg, Tramadol 200mg, Tablets
342, TRANXENE 10, Clorazepate dipotassium 10mg, Capsules
343, TRANXENE 5, Clorazepate dipotassium 5mg, Capsules
344, TREXAN 50, Naltrexone HCL 50mg, Tablets
345, TRISEQUENS, Oestradiol 2mg(blue tab),Oestradiol 2mg,Norethisterone acetate 1mg(white tab),Oestradiol 1mg(red tab), Tablets
346, TRISEQUENS forte, Oestradiol 4mg(yellow tab),Oestradiol 4mg,Norethisterone acetate 1mg(white tab),Oestradiol 1mg(red tab), Tablets
347, TRYPTIZOL 25, Amitriptyline HCL 25 mg, Tablets
348, TUSCALMAN, Noscapine HCL 15mg , Aether Guaiacolglycerinatus 100mg/10ml, Syrup
349, TUSSIFIN with codeine, Codeine phosphate 75mg Chlorpheniramine maleate 25mg,Glyceryl guaicolate 1gm,Sodium benzoate 3gm,Potassium citrate 3gm,Liquorice 7.5gm/100ml, Syrup
350, ULTIVA 1mg, Remifentanil 1mg/vial, Injection
351, ULTIVA 2mg, Remifentanil 2mg/vial, Injection
352, ULTIVA 5mg, Remifentanil 5mg/vial, Injection
353, UNIFED DM, Triprolidine HCl 1.25 mg, Pseudoephedrine (HCl) 30mg, Dextromethorphan HBr 10 mg/5ml, Syrup
354, VALIUM, Diazepam 2mg/5ml, Syrup
355, VALIUM , Diazepam 10mg/2ml, Injection
356, VALIUM 10, Diazepam 10mg, Tablets
357, VALIUM 2, Diazepam 2mg, Tablets
358, VALIUM 5, Diazepam 5mg, Tablets
359, VECURONIUM BROMIDE FOR INJECTION 10mg, Vecuronium Bromide 10mg/1 vial, Powder for Injection
360, VECURONIUM BROMIDE FOR INJECTION 20mg, Vecuronium Bromide 20mg/1 vial, Powder for Injection
361, VESANOID 10mg, Tretinoin 10mg, Capsules
362, VIRORMONE 10mg, Testosterone Propionate 10mg, Injection
363, VIRORMONE 10mg, Testosterone Propionate 10mg, Tablets
364, VIRORMONE 25mg, Testosterone Propionate 25mg, Tablets
365, VIRORMONE 25mg, Testosterone Propionate 25mg, Injection
366, XANAX 0.25 , Alprazolam 0.25 mg, Tablets
367, XANAX 0.5, Alprazolam 0.5 mg, Tablets
368, XANAX 1, Alprazolam 1 mg, Tablets
369, Zeldox 20mg/ml, Ziprasidone, Inj/Powder
370, ZOLOFT, Sertraline 50mg, Tablets
371, ZYPREXA 10 mg, Olanzapine 10 mg, Tablets
372, ZYPREXA 10 mg, Olanzapine 10 mg, Injection
373, ZYPREXA 5 mg, Olanzapine 5 mg, Tablets
374, ZYPREXA 7.5 mg, Olanzapine 7.5 mg, Tablets